குப்பையுடன் சேர்த்து கழிவகற்றல் வண்டியில் போடப்பட்ட பெருந்தொகைப் பணம்; உரிமையாளருக்கு மீளக் கிடைத்தது: கல்முனையில் சம்பவம்

🕔 December 22, 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா –

ல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையின்போது ஒரு வீட்டில் இருந்து ஒப்படைக்கப்பட்ட குப்பைப் பொதியினுள் தெரியாமல் சென்றிருந்த 150,000 ரூபா பணம், அவ்வீட்டு உரிமையாளருக்கு மீளக்கிடைத்த சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை நகர மண்டப வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டு உரிமையாளர் இன்று தனது தங்க ஆபரணமொன்றை வங்கியில் அடகு வைத்து, 150,000 ரூபா பணம் கொண்டு வந்துள்ளார்.

அதேநேரம் திண்மக்கழிவுகளை சேகரிக்கும் வாகனம் வந்தபோது சம்பந்தப்பட்ட நபர் குப்பைகளோடு பணத்தையும் தவறுதலாக போட்டுவிட்டு, குப்பை பொதியை கழிவகற்றும் வாகன ஊழியர்களிடம் ஒப்படைத்துளை்ளார்.

பிறகு வாகனம் சென்று நீண்ட நேரத்தின் பின்னர், இவ்விடயத்தை உணர்ந்த நபர், அப்பகுதி திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரின் கவனத்துக்கு வியடத்தைக் கொண்டு சென்றார்.

உடனடியாக மேற்பார்வையாளர் செயற்பட்டு, வாகன சாரதி மற்றும் ஊழியர்களின் உதவியுடன் குறித்த திண்மக்கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்ட அனைத்து கழிவுக் குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆராய்ந்து, பணத்தை தேடிக்கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்ததாக, மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார்.

இந்த செயற்பாட்டின் காரணமாக கல்முனை மாநகர சபைக்கு நற்பெயரை ஈட்டித்தந்த குறித்த மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்களை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்