சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் அகற்றப்படாத குப்பை: கல்முனை மாநகர சபையின அலட்சியம் 0
– அஸ்ஹர் இப்றாஹிம் – கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது குடியேற்ற கிராமமான பொலிவேரியன் பிரதேசத்தின் மேற்புறமாகவுள்ள பிரதேசத்திலும், பாலத்துக்கு அருகாமையிலும் குப்பைகள், பல மாதங்களாக அகற்றப்படாமல் குவிந்து காணப்படுகின்றது. மக்கள் நடமாட்டமுள்ள இப்பிரதேசத்தில் பொது மைதானம் , விவசாய விரிவாக்கல் அலுவலகம் , சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் , கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம்