கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்க தீர்மானம்
கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்கவுள்ளது.
அந்த வகையில் மூன்று மருந்துகளுக்கு, அடுத்த வாரமளவில் உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்கவுள்ளதாக கூறியுள்ளது.
இதன்படி பைசர், மொடனா மற்றும் அஸ்ட்ரா செனக்கா ஆகிய நிறுவனங்களின் மருந்துகளுக்கே அங்கிகாரம் வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே பிரித்தானியாவில் பைசர் நிறுவனத்தின் மருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
உலகில் முதலாவதாக பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை பிரித்தானியாவைச் சேர்ந்த 90 வயது பெண் ஒருவர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.