றிசாட் பதியுதீனின் விளக்க மறியல் இம்மாதம் 13ஆம் திகதி வரை நீடிப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் தொடர்ந்தும் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டே நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்கிழமை அவர் ஆஜர் செய்யப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.
கடந்த மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவரை ஒக்டோபர் 27ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பின்னர் கடந்த மாதம் அவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவரின் விளக்க மறியல் இன்றைய தினம் வரை நீடிக்கப்பட்டது.
தொடர்பான செய்தி: றிசாட் பதியுதீனை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு