நாட்டில் 273 பொலிஸார் கொரோனாவினால் பாதிப்பு

🕔 November 5, 2020

நாட்டில் கொவிட்19 நோயால் 273 பொலிஸார் இதுவரையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களில் 180 பேர் மேல் மாகாணத்தில் கடமையாற்றுகின்றவர்களாவர்.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 257 ஆகவும், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1302 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணி வரையில், நாட்டில் 12,187 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 5,858 பேர் முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்