கொரோனாவினால் 68 வயது பெண்ணொருவர் பலி

🕔 November 3, 2020

நாட்டில் கொரோனா காரணமாக நபரொருவர் மணிதுள்ளார். இது கொரோனா தொற்றினால் ஏற்பட்ட 22ஆவது இறப்பகும்.

கொழும்பு, ஜம்பெட்டா வீதியை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளின் போது, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று பிள்பகல் 2.00 மணி வரையில் நாட்டில் இதுவரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் 11,335 என, சுகாதர மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 5,581 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்