22ஆக பதிவான கொரோனா மரணம் 21 ஆனது: இறுதி நபர் பட்டியலில் இருந்து நீக்கம்

🕔 November 2, 2020

நாட்டில் பதிவாகியதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த 22ஆவது கொரோனா மரணத்தை, கொரோனா மரணத்தில் உள்ளடக்குவதில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்திருந்தார்.

இதனையத்து அவரின் சடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, இவரின் மரணத்தை கொரோனா மரணமாக குறிப்பிட்ட சுகாதார அமைச்சு, நாட்டில் ஏற்பட்ட 22ஆவது கொரோனா மரணம் எனவும் இதனை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது மேற்படி மரணத்தை கொரோனா மரணப்பட்டியலில் இருந்து நீக்கி விடுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேற்படி தற்கொலை செய்து கொண்ட நபர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்