பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி

🕔 October 20, 2020

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மதுஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, மாளிகாவத்தை வீட்டுத் திட்டத்தில் 22 கிலோ ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் மகந்துரே மதுஷுடன் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருந்ததாகவும், அவர்களுக்கும் குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிக்கி, மதுஷ் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: மாகந்துர மதுஷ் வழங்கிய தகவலில், 10 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்