மரண தண்டனைக் கைதி பிரேமலால், நாடாளுமன்றுக்கு வருகை

🕔 September 8, 2020

ரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகை தந்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றம் கூடுகிறது.

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு செப்டம்பர் மாதத்துக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகிறது.

இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் நாடாளுமன்றம் ஒன்றுகூடவுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக மரண தண்டனைக் கைதி – பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இன்று பதவி பிரமாணம் செய்யவுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் அவர் இன்று நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: பிரேமலால் ஜயசேகரவை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்