அரச ஊடக நிறுவனங்களில் சம்பளம் வழங்க முடியாத நிலை; திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை ஒப்புதல்

🕔 September 3, 2020

ரச ஊடக நிறுவனங்களான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனம் ஆகியவற்றுக்கான அத்தியவசிய செலவுகளுக்குரிய நிதியை, திறைசேரியில் இருந்து கொடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

வெகுஜன ஊடக அமைச்சர் இதற்கான பரிந்துரையை நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.

கொவிட் 19 வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் வருமானம் குறைவடைந்ததன் காரணமாக இந்த நிறுவனங்களின் சம்பளம் மற்றும் அத்தியாவசிய செலவுகளை சமாளிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் 2020 ஆம் ஆண்டில் செப்டெம்பர் மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையிலான 04 மாத காலத்துக்கு இந்த நிறுவனங்களின் அத்தியாவசிய செலவுகளுக்கான நிதியை திறைசேரியில் பெற்றுக்கொள்வதற்காக வெகுஜன ஊடக அமைச்சர் மேற்படி பரிந்துரையை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

மேலும் இந்த நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக மூலோபாய திட்டத்தை தயாரித்து திறைசேரியின் உடன்பாட்டைப் பெற்று, அந்த திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சரவையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்