அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வரைவை உருவாக்குவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.