நாடளாவிய ரீதியில் நான்கு நாட்களுக்கு மின்வெட்டு

🕔 August 18, 2020

நாடளாவிய ரீதியில் 04 நாட்களுக்கு மின்வெட்டு அமுல் செய்ப்படவுள்ளது. அதற்கிணங்க நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நான்கு வலையங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கட்டங்களில் குறித்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அதன்படி, மாலை 06 மணி முதல் இரவு 07 மணி வரையும், இரவு 07 மணி முதல் இரவு 08 மணி வரையும், இரவு 08 மணிமுதல் இரவு 09 மணி வரையும், இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரையும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நுரைச்சோலை மின் ஆலையில் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் வரையில், மின் துண்டிப்பை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்