கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர்
நாட்டில் மது மற்றும் புகைத்தல் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.
கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து அமுலாக்கப்பட்ட முடக்கநிலை காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இலங்கை மதுபான மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுத் தகவல் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் மேற்படி ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் பிரகாரம், மதுபான நுகர்ச்சி 80 சதவீதத்தாலும், புகைத்தல் மற்றும் புகையிலை பயன்பாடு 48 சதவீதத்தாலும் குறைந்திருக்கிறது.
முடக்கநிலை காரணமாக 20 சதவீதமானவர்கள் புகைத்தல் மற்றும் புகையிலை பயன்பாட்டில் இருந்து முற்றாக விலகியிருக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.