தபால் நிலையங்கள் மே 04ஆம் திகதி தொடக்கம் திறக்கப்படும்

🕔 April 29, 2020

பால் நிலையங்கள் அனைத்தும் – எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி தொடக்கம் வழமைபோல் திறக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

மாதாந்திர கொடுப்பனவுகள், முதியோர் கொடுப்பனவுகள், விவசாய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியங்கள் உட்பட 2020 மே மாதத்துக்கான அனைத்து கொடுப்பனவுகளும் தபால் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஏனைய சேவைகளும் தபால் நிலையங்களில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்