கொரோனா தொற்று; நாட்டில் 65 பேர் பாதிப்பு: உலகளவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி

🕔 March 20, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை (காலை 11.03 மணி வரை) 65 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கிறது.

இன்றைய தினம் 06 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட போதிலும், இன்னும் உறுதிப்படுத்தப்படாத 218 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உலகளவில் மொத்தமாக கொரோனா தாக்கத்தினால் (வெள்ளிக்கிழமை காலை 11.03 மணி வரை) 10,048 பேர் பலியாகியுள்ளனர்.

245,913 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் கொரோனா தொற்றுக்குள்ளான 88,138 பேர் அதிலிருந்து குணம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்