சகல பரீட்சைகளும் பிற்போடப்பட்டன: கொரோனாவினால் 21 பேர் பாதிப்பு

🕔 March 16, 2020

மார்ச் மாதம் நடைபெறவிருந்த சகல பரீட்சைகளும் திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் பொது விழாக்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான பரீட்சைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே தற்பொழுது சகல பரீட்சைகளும் மறு அறிவிப்பு வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது நாட்டில் கொரோனா தொற்றினால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments