மதுஷ், கஞ்சிப்பான இம்ரான் ஆகியோரின் சகா கைது
மாகந்துர மதுஷ் மற்றும் கஞ்சிப்பானி இம்ரான் ஆகியவர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த ஒருவர், அழுத்கம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொண்ட தேடுதலின் போது இவர் கைதானார்.
தர்காநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய சஞ்சீவ புஷ்பகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக் குற்றங்களுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் கைது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.