குண்டு தயாரிப்பவர்களைத் தயாரிப்போரை இனங்காணல் அவசியம்: பஷீர் சேகு­தாவூத்

🕔 April 22, 2019

வ்வப்போது குண்டு தயாரிப்பவர்களையும், குண்டுகளோடு குதிப்பவர்களையும், குண்டுகளை மக்கள் கூடும் இடங்களில் கொண்டு வைப்பவர்களையும் கண்டுபிடித்து களைவதை விடவும் நீண்டகாலமாக குண்டு தயாரிப்பவர்களைத் தயாரிக்கும் தத்துவார்த்த அரசியல் மதவாத புலனாய்வு சக்திகளைக் கண்டுபிடித்து துடைத்தழிப்பதே அவசியத் தேவையாகும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு­தாவூத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பக்கத்தினூடாக அவர் இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

நம்மடாக்கள்ட பேர்தான் “அடிபடுது” என்கின்றனர். அதுசரிதான், ஆனால் “அடிபடப்போவது” இனி பெயர்கள் மட்டுமல்ல, நாமும் நமது மக்களும் நமது பேரர்களும்தான் என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்தல் வேண்டும்.

விரிவான ஆய்வு வேறு கதைகளைச் சொல்லக்கூடும்.

எனது மூளையும் இதயமும் சுக்குநூறாகி வெடிக்கும் வேளை வெளியாகும் ‘அந்நூர்’ எனும் வெளிச்சம் பெரு வெளியில் பரவ தற்கொலைத் தாக்குதல் எனச் சொல்லப்படும் தொடர் குண்டு வெடிப்புகளால் கொல்லப்பட்ட எமது மக்களையும் வெளிநாட்டு சோதரர்களையும் அஞ்சலிக்கிறேன்.

இந்த வகை அஞ்சலி – ஹறாம் என ‘பத்வா’ தரும் எவரையும் நான் பொருதத் தயார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்