அத்துரலியே ரத்ன தேரர், ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானம்
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கிய ஜனாதிபதியின் தீர்மானத்தை, தான் ஏற்றுக் கொள்வதாகவும் தேரர் கூறினார்.
ஏற்கனவே, நாடாளுமன்றில் இவர் சுயாதீனமாகச் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதில் அத்துரலியே ரத்ன தேரர் முக்கிய பங்காற்றினார்.