தெ.கி.பல்லைக்கழக விரிவுரையாளர் அன்சார் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு

🕔 May 13, 2018

– எம்.வை. அமீர்-

தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.ஆர். முகம்மட் அன்சார் எழுதிய மூன்று ஆங்கில நூல்களை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா மெகா ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதன் தலைவர் ஏ.எம். அஹுபறின் தலைமை தாங்கினார்.

சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.குணபாலன் கௌரவ அதிதியாகவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நூல்கள் பற்றிய விமர்சனங்களை அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியின் உதவிப் பீடாதிபதி எம்.ஏ. கலீல் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆங்கிலமொழி துறைத் தலைவர்  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.

நூலாசிரியருக்கு அவரது உறவினர்களாலும் பல்கலைக்கழக சகாக்களினாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் ஏற்பாட்டாளர்களால் ஞாபக சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. நூலின் முதற்பிரதியை நூலாசிரியரின் துணைவியார் றிப்கா அன்சார் பெற்றுக்கொண்டார்.

ஏ.ஆர். முகம்மட் அன்சார் எழுதிய BRIDGE THE GAP, ASKING AND ANSWERING 1 மற்றும்  ASKING AND ANSWERING 2  எனும் தலைப்பிலான  மூன்று நூல்கள் இதன்போது வெளியிடப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்