எரிபொருளுக்கு நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு
எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
விலை அதிகரிப்பு விபரம் ( 1 லீட்டர்)
ஒக்டைன் 92 – 137 ரூபா
ஒக்டைன் 95 – 148 ரூபா
ஒட்டோ டீசல் – 109 ரூபா
சுப்பர் டீசல் – 119 ரூபா
மண்ணெண்ணெய் – 101 ரூபா
இதேவேளை, சமுர்த்தி பயனாளிகளும், மீனவர்களுக்கும் மண்ணெண்ணெய்யை பழைய விலையான 44 ரூபாவுக்கே பெற்றுக்கொள்ளமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சமையல் எரிவாயு மற்றும் பால் மா ஆகியவற்றுக்கு அரசாங்கம் விலை உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.