மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு

🕔 May 1, 2018

மாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலைமை உரு­வாகி உள்­ளதாக பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன.

மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் காலதா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யால், இந்த நிலைவரம் உருவாகியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் கூறியுள்ளன.

மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை நாடா­ளு­மன்றில்­ இதுவரை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹன ஹெட்டியா­ராச்சி தெரிவிக்கையில்;

“மூன்று மாகாண சபை­க­ளுக்­கான பதவிக்காலம்  நிறை­வ­டைந்­துள்ள நிலையில் அவற்­றுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கைகள் இது வரையில் நாடாளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­ப­ட­வில்லை. குறித்த ஒரு­மாத காலப்­ப­கு­திக்குள் எல்லை நிர்­ணய அறிக்கை வெளி­யி­டப்­பட்டால் மாத்­தி­ரமே, குறிப்­பிட்ட காலத்தில் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தலை நடத்த முடியும். ஆனால், எல்­லை­நிர்­ணய அறிக்கை இது வரையில் வெளியிடப்­ப­டவில்லை. எனவே, மாகா­ண­சபை தேர்­தலை செப்­டெம்பர் மாதத்தில் நடத்த முடி­யாத நிலை உரு­வா­கி­யுள்­ளது.

ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் எல்லை நிர்­ணய அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டவில்லை என்றால், எல்லை நிர்­ணய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஆராய்­வ­தற்­கென தனி­யான குழு­வொன்றை பிரதமர் நிய­மிக்க முடியும். அந்த குழு­வி­னூ­டாக எல்லை நிர்­ணய நடவடிக்­கை­களை விரை­வு­ப­டுத்தும் பணி­களை மேற்­கொள்ள முடியும். அவ்வாறான  குழுவும் இது­வ­ரையில் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

மாகாண சபை­தேர்தல் முறை­மை­தொ­டர்பில் பல­வா­றான விமர்­ச­னங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தற்­போது எல்லை நிர்­ணய அறிக்­கையின் தாமதமும் தேர்தலை ஒத்திவைக்க கூடிய சூழ்­நி­லையை தோற்­று­வித்­துள்­ளது.

மேலும் சிவில் அமைப்பு என்ற ரீதியில் எல்லை நிரண்ய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஆராய்­வ­தற்­கென பெப்ரல் அமைப்பு – குழு­வொன்­றினை நிய­மித்­துள்­ளது. இருந்தபோதும் தற்­போது நடை­மு­றையில் உள்ள தேர்தல் முறை­மை­யி­லா­வது மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லினை விரைவில் நடத்­த­வேண்டும்” என்றார்.

இது குறித்து கபே அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் கீர்த்தி தென்­னகோன் கூறுகையில்;

“மாகா­ண­சபை தேர்­தலை காலந்­தாழ்த்­து­வ­தற்­கா­கவே எல்லை நிர்­ணய அறிக்கையினை வெளியிடும் பணிகளும் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன. எல்லை நிர்ணய அறிக்கையை வெளியிடாமல் தேர்தலை நடத்த முடியாது.

குறித்த காலத்தில் தேர்தலை நடத்த வேணடுமானால் எல்லை நிர்ணய அறிக்கையும் விரைவில் வெளியிடப்படவேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்