பால்மா, சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கின்றன
பால்மா மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் இன்றும் சில தினங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
அதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 75 ரூபாவாலும் சமையல் எரிவாயு 12.5கிலோகிராம் எரிவாயுவின் விலை 245 ரூபாவாலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் இவற்றின் விலை அதிகரிப்புகள் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும்.
உலக சந்தையில் பால்மா மற்றும் சமையல் எரிவாயு அதிகரித்துள்ள காரணத்தால், அவற்றின் விலைகளை உள்நாட்டிலும் அதிகரிக்குமாறு, உரிய பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்கள், வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவிடமும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடமும் அனுமதி கோரியிருந்தன.
ஒருகிலோ பால்மாவின் விலையை 100 ரூபாவாலும் சமையல் எரிவாயுவின் விலையை 275 ரூபாவாலும் அதிகரிக்கும்படி பாவனையாளர் அதிகார சபையிடம் கோரிக்கை விடப்பட்டது.
தற்போது 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு கொழும்பில் 1431 ரூபாவாவுக்கும், ஒரு கிலோ பால்மா 810 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.