ராணுவம் விடுவித்த பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு
🕔 April 19, 2018

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்திக்கு அருகில் உள்ள வீட்டு கிணற்றுத் தொட்டியில் இருந்து நேற்று புதன்கிழமை மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டன.
ராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக 28 ஆண்டு காலமாக இ இருந்த வலி.வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த 13ஆம் திகதி காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
அவ்வாறு விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றின் கிணற்றடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள், மோட்டார் குண்டுகள் காணப்பட்டன.
இது தொடர்பில் அருகில் இருந்த ராணுவ முகாமுக்கு வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து, உரிய இடத்துக்குச் ராணுவத்தினர் சென்றனர்.
பின்னர், கண்ணிவெடி அகற்றும் குழுவினர் அங்கிருந்து குண்டுகளை மீட்டுச் சென்றனர்.

