உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் சட்டம் திருத்தப்பட வேண்டும்: ஜனாதிபதி

🕔 April 6, 2018

ள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும், அரசாங்கத்தைப் பலப்படுத்த வருமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதன்போது, ஜனாதிபதி மைத்திரி அழைப்பு விடுத்தார்.

உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், புதிய தேர்தல் முறையில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவ்வாறானதொரு நிலையிலேயே, குறித்த தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்