லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது

🕔 December 22, 2017

சிகிச்சையின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க – முன்வைத்த கோரிக்கையினை,கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

தாய்வான் வங்கியொன்றிலிருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கை வங்கியொன்றுக்கு பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில், ஷலில முனசிங்கவை, குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்திருந்தது.

இதனையடுத்து, சில காலம் இவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.

மேற்படி குற்றச்சாட்டின் பேரில் ஷலில முனசிங்க கைதானமையினை அடுத்து, லிற்றோ எரிவாயு நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்