அட்டாளைச்சேனை பிரதேசத்தில், கலைஞர்கள் கௌரவிப்பு விழா

🕔 December 21, 2017

– எம்.ஜே.எம். சஜீத் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை இலக்கிய விழாவும் கலைஞர் கௌரவிப்பு வைபவமும் இன்று வியாழக்கிழமை மாலை அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமை தாங்கினார்.

மேலும், தென்கிழக்கு பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ்அப்துல்லாஹ் இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி, அட்டாளைச்சேனை, ஆலம்குளம், தீகவாபி மற்றும் மீலாத் நகர் ஆகிய பகுதிகளிலுள்ள 30 கலைஞர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன், அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றமாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

இதன்போது மூவின சமூகங்களினையும் பிரதிபலிக்கும் வகையில் கலை கலாசார பாரம்பரிய நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.

இவ் வைபவத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல். மஹ்றூப், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.எல்.எம். அஸ்லம், ஏ.எல். ஹுசைன்துன், நிருவாக உத்தியோகத்தர் எம். றபியுதீன் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம். றின்சான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்