ஸிமாரா அலியின் கவிதை நூல் வெளியீடு

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நூலை வெளியிட்டு வைத்தார்.
இந்த நிகழவில் மேல் மாகாண சபை உறுப்பினர் பைறூஸ் ஹாஜி, பிரபல ஒலிபரப்பாளரும் கலைஞருமான பி.எச். அப்துல் ஹமீட் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நூலின் முதல் பிரதியை பிரபல தொழிலதிபர் பௌசுல் ஹமீத் பெற்றுக் கொண்டார்.
கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நூல் நயவுரையை மேன் கவி, புர்கான் தி இப்திகார் ஆகியோர் வழங்கினர்.
எழுத்தாளர் முல்லை ரிஸானா கவி வாழ்த்தைப் பாடியதுடன் அவரது கணவர் நூலாசிரியருக்கு வாழ்த்துப் பத்திரத்தை வழங்கினார்.
தமிழ் மிரர் ஆசிரியர் ஏ.பி. மதன், மெட்ரோ நியூஸ் செய்தி ஆசிரியர் சித்தீக் காரியப்பர், ரூபவாஹினி கூட்டுத்தாபன நடப்பு விவகாரப்பிரிவுப் பணிப்பாளர் யூ.எல். யாகூப், கவிதாயினி பாத்திமா நளீரா மற்றும் ஊடகவியலாளர் சட்டத்தரணி ஏ.எம். தாஜ் ஆகியோர் அமைச்சரிடமிருந்து சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.




