ஆபத்தைக் குறைத்தல் எப்படி தீர்வாக முடியும்; சிறுபான்மையின அரசியல்வாதிகளை நினைக்க, நகைப்பாக உள்ளது என்கிறார் நாமல்

🕔 September 27, 2017

சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படக் கூடிய வகையில், நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்த மாகாண சபை தேர்தல்முறை மாற்ற சட்டமூலத்தில், சிறு பான்மையின மக்களுக்கு இருந்த பாதிப்பை குறைத்துவிட்டதாக, சிறுபான்மையின அரசியல்வாதிகள் பெருமை பேசுவதை பார்க்கும் போது நகைப்பாக உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இந்த நல்லாட்சி அரசாங்கமானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது பலவாறான குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தி கொண்டு வரப்பட்டிருந்தது.

முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனவாதிகளுடன் இணைந்து சிறுபான்மையின மக்களுக்குதுரோகமிழைக்கின்றார் என்ற மிகப் பெரும் குற்றச் சாட்டை அவர் மீது முன் வைத்திருந்தனர். அப்படியானால் அவர்கள் கொண்டுவந்த நல்லாட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில்நடந்தேறிய இனவாத செயற்பாடுகளை நிறுத்தும் வகையிலும், அதற்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் கொண்டு வந்துள்ள அரசாங்கமானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நடைபெற்ற எந்த வித இனவாத செயற்பாடுகளையும் நிறுத்தவுமில்லை அதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க்கவுமில்லை.

அதற்கு மாறாக இந்த அரசாங்கமே முன்னின்று இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. அப்படியானால் சிறுபான்மையின அரசியல்வாதிகள் எந்த நோக்கத்தை பிரதானமாக முன்வைத்துக் கொண்டு வந்தார்களோ, அதற்கு இவ் ஆட்சி எதனையும் செய்யவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுஷடைய காலத்தில் இனவாத செயற்பாடுகளை சில இனவாதஅமைப்புக்கள்தான் முன்னெடுத்திருந்தன. தற்போது சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவங்களை குறைக்கும் வகையிலான தேர்தல் மாற்றத்தை இவ்வரசாங்கமே முன்னின்று செய்து கொண்டிருக்கின்றது.

இந்த அரசாங்கம் கொண்டுவந்த செயற்பாடு சிறுபான்மையின மக்களை மிகவும் பாதிக்கும் வகையில்அமைந்திருந்தும், அதனை சிறுபான்மையின அரசியல்வாதிகள் நன்கு அறிந்திருந்தும், இவ்வரசாங்கத்தை விமர்சிக்க செல்லவில்லை. மாறாக அதில் இருந்த பாதிப்புக்களை குறைந்துவிட்டதாக பெருமை பேசுகின்றனர்.

நன்றாக சிந்தித்துப் பாருங்கள், ஆபத்தை குறைத்தல் என்பது எப்படி தீர்வாகும்? இதற்குத்தான் இந்நல்லாட்சியை கொண்டு வந்தார்களா? ஆட்சியாளர்கள் சிறுபான்மையின மக்களை பாதிக்கும் வகையிலான சட்டத்தை நிறைவேற்ற விரும்பினால், நூறுவீதம் பாதிப்புக்களை உள்ளடக்கிய சட்டத்தைக் கொண்டு வந்து, அதில் சிறு மாற்றங்களை செய்து, ஆபத்தை குறைத்தால் சிறுபான்மையின அரசியல்வாதிகள் ஏற்றுக்கொண்டு விடுவார்களா?

முதலில் இது சாதூரியமான பேச்சாகுமா? இக் கருத்தை இந்நல்லாட்சியை உருவாக்குவதில் மிகவும் பங்களிப்புச் செய்தவரும் சிறுபான்மையின மக்களின் அதிக நன்மதிப்பையும் பெற்ற அமைச்சர் மனோ கணேசன் கூறியிருப்பதானது, அவரின் முகத் திரை – படிப்படியாக கிழிய ஆரம்பிப்பதாக கொள்ளலாம்.

இதுவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சதிதான் எனக்கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்