ஓடிக்கொண்டிருந்த மூட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டது; தப்பித்தார் ஓட்டுநர்

🕔 September 7, 2017

– க. கிஷாந்தன் –

மோ
ட்டார் சைக்கிளொன்று ஓடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென தீப்பற்றிக் கொண்ட சம்பவமொன்று பெனியன் சந்தி, மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மோட்டார் சைக்கிளை விட்டும் குதித்தமையால் தீக்காயங்கள் இன்றித் தப்பிததுக் கொண்டார்.

இந்த மோட்டர் சைக்கிள் எரிவதைக் கண்ட பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

ஆயினும் சுமார் 2 ½ லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் கடுமையான சேதங்களுக்குள்ளாகி உள்ளது.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்