நுளம்புச் சுருள் பாவனையினால், ஆஸ்துமா நோய் அதிகரிப்பு

🕔 August 8, 2017

நுளம்சுச் சுருள் பாவிப்பதால், மனிதர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நுளம்புச் சுருளில் அடங்கியுள்ள நச்சுப் பதார்த்தங்கள், 175 சிகரட்டிலுள்ள நச்சுப் பதார்த்தங்களுக்குச் சமமாகும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

புகைத்தல் மற்றும் காற்று மாசுகளைக் காட்டிலும், நுளம்புச் சுருள் பாவனையே ஆஸ்துமா நோய்க்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் இலங்கையில் 02 லட்சம் ஆஸ்துமா நோயாளர்கள் இனங்கானப்படுகின்றனர். தெற்காசியாவில், இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுவோரைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்