ஜனாதிபதி அப்படிச் சொல்லவேயில்லை; அனைத்தும் வதந்தி: மறுக்கிறார் ரவி
அமைச்சுப் பதவியிலிருந்து தன்னை ராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியதாக வெளிவரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு, அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, ராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக இன்று ஊடகங்களில் செய்திகள் பரவியிருந்த நிலையிலேயே, அமைச்சர் மேற்படி செய்திகளை மறுதலித்துள்ளார்.
தன்னை ராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி கூறியதாக வெளிவரும் செய்திகள் வதிந்திகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.