மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா

🕔 July 16, 2015

resignation - 01மூன்று பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பிரதியமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, எரிக் பிரசன்ன வீரவர்த்தன மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரே – இவ்வாறு அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரி மீதான அதிருப்தியினை வெளிப்படுத்தும் வகையிலேயே, இவர்கள் இவ்வாறு தமது பதவிகளை ராஜிநாமாச் செய்வதாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நேற்று முன்தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையானது, இவர்களை இவ்வாறு அதிருப்தி கொள்ளச் செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்