டிப்பர் மோதி சிறுமி பலி; சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு பொதுமக்கள் தீ வைப்பு
🕔 June 15, 2017
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Kilakkin-Kedayam-750x150-01-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/02/EFC-750X150-02.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/12/Atham-Lebbe-01-7500X150-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/01/Abdullah-750X150-03-.jpg)
– க. கிஷாந்தன் –
பாதையை கடக்க முற்பட்ட 06 வயது சிறுமி மீது, டிப்பர் வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே சிறுமி பலியான சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நானுஓயாவில் இடம்பெற்றது.
சிறுமி பலியானமையினை அடுத்து ஆத்திரமுற்ற பொதுமக்கள், சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு தீ வைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற டிப்பர் வாகனமே விபத்தினை ஏற்படுத்தியிருந்தது.
நானுஓயா நகரத்திலிருந்து பொலிஸ் வழியாக நானுஓயா ஜேம்ஸ் பீரிஸ் சிங்கள வித்தியாலயத்திற்கு செல்லும் பொருட்டு, குறித்த சிறுமி பாதசாரி கடவையை கடக்க முயன்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
ரதல்ல கீழ்பிரிவு பகுதியை சேர்ந்த ஆக்காஷா தேவ்மிணி என்ற 06 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் கலவரம் ஏற்பட்டதனால் பதற்ற நிலை நிலவி வருகின்றது. எனினும் இதனை கட்டுப்பட்டுத்துவதற்கு விசேட அதிரடி படையினர், பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தினால் ஹட்டன் நுவரெலியா ஊடான பொது போக்குவரத்து பல மணி நேரம் முற்றாக தடைப்பட்டது.
![](https://puthithu.com/wp-content/uploads/2024/03/Alahapuri-750X150-01.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Fairoos-Express-750x150-01-.jpg)