மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதி கைது
மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதியான கட்டன் திஸ்ஸ விமலசேன இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதர்வரும் 27ஆம் திகதி வரை விழக்க மறியலில் வக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் பேரில், கப்டன் திஸ்ஸவை, இன்று காலை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
சந்தேச நபரை கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் சனிம விஜேபண்டார முன்னிலையில் ஆஜர் செய்தபோது, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.