தூக்கியடித்துக் கொன்று விடுவேன்; விஜயகாந்த் பாணியில் ஊடகவியலாளரை மிரட்டிய அமைச்சர் ஜோன் அமரதுங்க

🕔 June 8, 2017

“பொய்யான தகவல்களை பரப்பினால் தூக்கி அடித்து கொன்று விடுவேன்” என்று, ஊடகவியலாளர் ஒருவரை விஜயகாந்த் மாணியில் அமைச்சர் ஜோன் அமரதுங்க,  மிரட்டியதோடு, தாக்குவதற்கும் முயற்சித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பதிவானது.

போபிடிய பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது, திடீரென கோபமடைந்த அமைச்சர், ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியோடு மேற்கண்டவாறு, அச்சுறுத்தல் விடுத்தார்.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் – வத்தளை கெரவலபிடிய, முத்துராஜவல ஆகிய பகுதிகளில் கொட்டப்படுவதற்கு, பிரதேச மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் கந்தானை அலுவலகத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதன்பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்க வந்த அமைச்சரிடம் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்; போபிடிய பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு அமைச்சர் மீது மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர் எனக் கூறினார். இதன்போது கோபமடைந்த அமைச்சர்; “பொய்யான தகவல்களை பரப்பினால் தூக்கி அடித்து கொன்று விடுவேன்” என்று கூறி, ஊடகவியலாளரைத் தாக்க முயற்சித்தார்.

அதேவேளை, குறித்த ஊடகவியலாளரை செய்தி சேகரிப்பதற்கு இனிமேல் அனுமதிக்க கூடாதெனவும், உடேன அங்கிருந்து வெளியேற்றுமாறும் அமைச்சர் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரை அமைச்சர் தாக்குதற்கு பல தடவைகள் முயற்சித்த போதும், அருகில் இருந்தவர்கள் அதனைத் தடுத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்