மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை அகற்றக் கூடாது: நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண

🕔 April 19, 2017

மீதொட்டமுல்  குப்பை மேட்டினை அகற்றக் கூடாது என்று ஒன்றிணைந்த எதிராணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

குறித்த குப்பை மேட்டினை அகற்றுவதால் மேலும் பல புதிய சிக்கல்கள் தோன்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

மீதொட்டமுல்ல பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றாமல் அவ்விடத்தில் வைத்தே உக்கலடையச் செய்ய வேண்டும்.

நான் ஒரு விஞ்ஞானி. விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளேன். எதிர்பாராத விதாமாக தற்போதைய அரசாங்கமும் கூட எனக்கு வித்யா ஜோதி விருது வழங்கியது.

மீதொட்டமுல்ல குப்பை மேடு விவகாரம் குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதையும், விஞ்ஞான முறையில் எவ்வாறு முகாமைத்துவம் செய்யலாம் என்பதையும் சகலரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

தற்போது மீதொடுமுல்லை குப்பை மேட்டினை அகற்றுவது  சரியான முடிவல்ல என்று, விஞ்ஞான துறைசார்ந்த சகலரும் கூறுகின்றார்கள். அது அவ்வாறே இருக்க இடமளிக்க வேண்டும். பின்னர் அதனைச் சூழவும் கனமான பிலாஸ்டிக் பாதுகாப்பு வேலிகளை இடவேண்டும். அவ்வாறு செய்தால் குப்பை மேடு இயற்கை பசளையாக மாறிவிடும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்