நிலவுக்கு சுற்றுலாப் பயணம்: பணம் செலுத்தி பதிவும் நடந்தாயிற்று

🕔 February 28, 2017
– எஸ். ஹமீத் –

நிலவுக்கு சுற்றுலா சென்று வருவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் முற்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) இந்தத் தகவலை நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டின் இறுதியில் மனிதர்கள் நிலவுக்கு சென்று வரவுள்ளனர். நாற்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு மனிதர்கள் இவ்வாறு நிலவுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலாப் பயணத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் முற்பணம் செலுத்தித் தம்மைப் பதிவு செய்திருக்கின்றனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளினால் வடிவமைக்கப்பட்ட ஸ்பேஸ்ஷிப் எனும் மிகப் பாரிய எடை தூக்கி ரொக்கட், இந்த நிலவுப் பயணத்தை  மேற்கொள்ளவுள்ளது.
ஆயினும், நிலவுச் சுற்றுலாவுக்குச் செல்லத் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ள அந்த இருவரும் யார் என்பது பற்றியும் அவர்கள் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படவில்லை.

நாசாவின் ஸ்பேஸ் நிலையத்துக்கான ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரெசன் தொழில் நுட்ப நிறைவேற்றுப் பிரதம அதிகாரியான ஏலோன் மாஸ்க் (Elon Musk)  இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்; ”அவ்விருவரும் நிச்சயமாக ஹொலிவூட்டிலிருந்து வந்தவர்கள் அல்லர்” என வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில்; ”ஒருவரையொருவர் நன்கு தெரிந்த இருவர்தான் முற்பணம் செலுத்தித் தம்மைப் பதிவு செய்துள்ளனர். நிலவுப் பயணத்துக்கு முன்னர், அவர்களுக்குத் தகுந்த பயிற்சியளிக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்