தனியார் சிகிச்சை நிலையங்களில், இரத்தப் பரிசோதனைக்கு இன்று முதல் தடை
அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு, தனியார் சிகிச்சை நிலையங்களில் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு, இன்று 01 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தத் தடையினை விதித்துள்ளார்.
சகல பரிசோதனை கூட வசதிகளும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்கு, கடந்த 31 ஆம் திகதியளவில் இரத்த பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் இரத்தப் பரிசோதனைகளை, தனியார் பிரிவினர் மேற்கொள்வதாக தெரியவந்தால், இன்று முதல் சம்பந்தப்பட்ட அரசாங்க வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்க வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் இது குறித்து விஷேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறும், சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜெயவிக்ரமவுக்கு, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.