கலகத்தை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில், நீதிமன்றில் ஆஜரான சுமணரத்ன தேரருக்கு பிணை

🕔 December 14, 2016

sumana-ratna-thero-011ட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதவான் நீதிமன்றில் ஆஜரான நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு நகரில் பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி, கலகத்தை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்தார் எனும் குற்றச்சாட்டில், சுமனரத்ன தேரர் மீது மட்டக்களப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இதற்கமைய, இன்றைய தினம் நீதிமன்றில் சுமனரத்ன தேரர் ஆஜராகினார்.

இதன்போது தேரரை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஜனவரி 25ஆம் திகதி தேரரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொது பல சேனா அமைப்பினர் கடந்த 03ஆம் திகதி மட்டக்களப்பு நகருக்கு வரவிருந்த நிலையில், மாவட்ட எல்லையில் வைத்து, நீதிமன்ற உத்தவின் பிரகாரம் அவர்களை பொலிஸார் தடுத்திருந்தனர்.

ஆயினும், பொது பல சேனவின் வருகை தடுக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட தடை உத்தரவை மீறி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் – மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டார்.

தேரரின் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டக்களப்பு நகரில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி கலகத்தை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில், இவர் மீது மட்டக்களப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.sumana-ratna-thero-022

Comments