வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வுக்கு, சுதந்திரக் கட்சி உடன்படாது: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டித் தீர்வுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் உடன்படாதென, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மஹாநாயக்கர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்தபோது இவ்விடயத்தைக் கூறினார்.
ஐக்கிய இலங்கைக்குள் முன்வைக்கப்படும் தீர்வுதான் இலங்கைக்கு உகந்ததென அவர் மேலும் குறிப்பிட்டார்.
புதிய அரசியல் யாப்பில் ஐக்கிய இலங்கைக்குள் வருகின்றதொரு தீர்வே முன்வைக்கப்படுமெனவும் அமைச்சர் நிமல் தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வகிக்கின்றார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.