கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு மருந்தாளர் நியமனம்; கடிதங்களை வழங்கி வைத்தார் அமைச்சர் நசீர்

🕔 November 17, 2016

naseer-023– சப்னி அஹமட் –

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்தாளர் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, மருந்தாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், 19 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் மருந்தாளர்களுக்கான 77 வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், 19 பேருக்கான நியமனத்தினை வழங்குவதாகவும், மற்றைய 56 வெற்றிடங்களை ஜனவரி மாதத்திற்குள் நிரப்ப உள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே. கருணாகரன், பிரதி செயலாளர் ஜே. ஹுஸைன்தீன் மற்றும் கிழக்கு மாகாண பிராந்திய பிரதி பணிப்பாளர் ஏ. லதாஹரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.naseer-021

Comments

புதிது பேஸ்புக் பக்கம்