பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையா, பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்: தொலைபேசி இலக்கம் அறிமுகம்
முறைப்பாடுகளை மேற்கொண்டும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாயின், அது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், 071 85 920 20 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறும் முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்க முடியும்.
விஷேடமாக, முறைப்பாடுகள் மேற்கொண்டும் அது தொடர்பில் பொலிசார் நடவடிகை முன்னெடுக்காமை குறித்தும், அவசர முறைப்பாடுகளையும் மேற்படி தொலைபேசி இலக்கத்தினூடாக தனக்கு அறிவிக்கும் படி பூஜித் ஜெயசுந்தர நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.