கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம்

🕔 September 27, 2016

Hakeem - 012– ரொபட் அன்­டனி –

க்­கு­வ­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் சம­யோ­சி­த­மா­கவும் செயற்­பட்டால் இனப்பிரச்சினைக்கு சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய நிரந்­தரத் தீர்வை காண­மு­டியும் என்ற நம்­பிக்கை இருக்­கின்­றது. ஆனால் வடக்­கிலும், தெற்­கிலும் உரு­வா­கி­யுள்ள இனவாத சக்­தி­களின் செயற்­பா­டு­களே எமக்கு சவா­லாக உள்­ளன. அவர்கள் சித்­து ­விளை­யாட்­டுக்­களை ஆரம்­பித்­துள்­ளனர். இதில் நாங்கள் சிக்­கி­வி­டாமல் நடு­நிலை பேணி செயற்­ப­ட­வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலைவரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

கடந்த கால அனு­ப­வங்­க­ளுடன் பார்க்­கையில் தற்­போது உரு­வெ­டுத்­துள்ள இன­வாதம் எமக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. விடு­த­லைப்­பு­லி­களும் பொங்­கு­த­மிழை நடத்தியே அவர்­க­ளுக்­கி­ருந்த நல்ல வாய்ப்பை தவ­ற­விட்­டனர். சில விட­யங்­களில் அவ்வப்­போது விட்ட தவ­றுகள் எங்­க­ளுக்கு படிப்­பி­னை­யாக உள்­ளன என்றும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்­டினார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்­ட அமைச்­சரை சந்தித்து உரை­யா­டி­ய­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இந்த விடயம் குறித்து அமைச்சர் மேலும் தெரி­விக்­கையில்;

“இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை மேலும் சர்ச்சைக்­குள்­ளாக்கும் வகையில் சில விட­யங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. வடக்கில் ‘எழுக தமிழ்’ என்றும் கிழக்கில் ‘கிழக்கின் எழுச்சி’ என்றும் தெற்கில் ‘சிங்­ஹலே’ என்றும் வித­வி­த­மான இன­வாத தீவி­ர­சக்­திகள் தலை­தூக்க தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

இவர்கள் வெவ்­வேறு துரு­வங்­க­ளாக செயற்­ப­டு­வ­தாக தென்­பட்­டாலும், ஒருவருக்கொருவர் உத­வு­கின்ற பாணி­யி­லேயே செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இறு­தியில் இவர்கள் எல்­லோரும் எதி­ரியின் நண்­பர்கள் என்ற அடிப்­ப­டையில் செயற்படு­வதைப் நாங்கள் காண்­கின்றோம். குறிப்­பாக மிகவும் பக்­கு­வ­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் கையா­ளப்­ப­ட­வேண்­டிய விட­யங்­களை பகி­ரங்­க­மாக போட்டுடைத்து குழப்­பி­வி­டு­கின்ற நில­வ­ரங்­களை ஏற்­ப­டுத்தக் கூடாது. மிகவும் கவனமாக இந்த விட­யங்­களை நாங்கள் கையா­ள­வேண்­டி­யுள்­ளது”.

கேள்வி: அதா­வது எழுக தமிழ் போன்ற பேர­ணிகள் நல்­லி­ணக்­கத்­திலும் தீர்வைக் காண்­ப­திலும் முட்­டுக்­கட்­டை­யாக இருக்­கு­மென கூறு­வ­தற்கு முற்­ப­டு­கி­றீர்­களா?

பதில்: எழுக தமிழ் நிகழ்வு நாட்டில் முழு­மை­யாக சமஷ்டி ஆட்சி வேண்டும், நல்லிணக்க தாமதம் கூடாது, பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் வேண்டும் போன்ற கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ளது. இது தெற்­கி­லி­ருக்­கின்ற இன­வா­தி­க­ளுக்கு தீணி­போடும் செயற்­பா­டு­க­ளா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. தெற்கிலுள்ள இன­வா­தி­க­ளுக்கு தீணி­போடும் வகையில் ஒரு சில செயற்­பா­டு­களை தூக்கிப் பிடிக்­கின்­றார்கள். ஆனால் இந்த இரண்டு துரு­வப்­ப­டுத்­தப்­பட்ட நிலைப்பாடுக­ளுக்­கு­மி­டையில் ஒரு மித­வாத நிலைப்­பாட்­டுக்கு நாங்கள் எல்­லோரும் வர­மு­டியும். அதற்­கான அதி­க­மான வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன.

அவற்­றை­யெல்லாம் குழப்­பி­ய­டிக்கும் வகையில் இந்த எழுக தமிழ் பேரணி அமைந்­து­வி­டக்­கூ­டாது என்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம். இதில் நாம் கவ­ன­மாக இருக்­க­வேண்டும். சரி­யான விட­யங்கள் சரி­யான நேரத்தில் செய்­யப்­ப­ட­வேண்டும். பிழை­யான தரு­ணத்தில் சரி­யான விட­யத்தை செய்­வதும், பிழை­யான விட­ய­மாக போய்­விடும்.

இந்த விட­யத்தில் நாங்கம் மிகவும் சாணக்­கி­ய­மா­கவும் பக்­கு­வ­மா­கவும் செயற்­பட்டு விட­யங்­களை கையா­ள­வேண்டும். வெண்ணை திரண்டு வரு­கின்ற போது தாழியை உடை­கின்ற வேலையை இந்தப் பேர­ணிகள் செய்­து­வி­டக்­கூ­டாது. இவை எல்­லா­வற்­றுக்கும் பின்னால் உட்­கட்சி முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. மறு­புறம் சில வெளி­நாட்டு சக்­தி­களின் தலை­யீடும் இதற்கு கார­ண­மாக இருக்­கலாம் என்றும் பேசப்­ப­டு­கின்­றது.

எனவே இவற்றை எல்லாம் நாங்கள் மிகவும் நிதா­ன­மாக கையா­ள­வேண்டும். பக்­கு­வ­மாக அணு­க­வேண்டும். இந்த நாட்டில் இனப்­பி­ரச்­சினை தீர்வு விவ­கா­ரத்தில் கைக்கு எட்­டி­யது வாய்க்கு எட்­டாத நிலை­வ­ரங்கள் தொடர்­க­தை­யா­கவே இருந்து வரு­கின்­றன. அது தொடர்ந்தும் தொடர்­க­தை­யாக இருக்க முடி­யாது.

என்­னு­டைய பாரா­ளு­மன்ற வாழ்வின் 22 வரு­டங்­களில் ஆரம்­பத்­தி­லி­ருந்தே அதா­வது என்­னு­டைய தலைவர் அஷ்ரப் காலத்­தி­லி­ருந்தே சர்­வ­கட்சி மாநா­டு­க­ளிலும், பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுக்­க­ளிலும் கட்­சியைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி கலந்­து­கொண்டு வந்­தி­ருக்­கின்றேன். இதில் எனக்கு கிடைத்­துள்ள பட்­ட­றி­வா­னது கைக்­கெட்­டி­யது, வாய்க்­கெட்­டாமல் போய்­விடும் நிலைமை உரு­வா­காமல் இருக்க விட்­டுக்­கொ­டுப்­புக்­களை செய்­ய­வேண்­டு­மென வலி­யு­றுத்­து­கி­றது.

ஆனால் நிலைப்­பா­டு­களை எப்­போதும் ஒரு தரப்பே விட்­டுக்­கொ­டுக்­க­வேண்டும் என்றும் நெகிழ்வுத் தன்­மை­யுடன் நடக்­க­வேண்டும் என்றும் கூற­வில்லை. யுத்­தத்தின் பின்­ன­ரான இந்த சூழ­லிலும் நல்­லி­ணக்­கத்­திற்கு சர்­வ­தேசம் சிறந்த சமிஞ்­சையை காட்­டிக்­கொண்­டி­ருக்­கின்ற பின்­ன­ணி­யிலும் அவற்றைப் பயன்­ப­டுத்தி ஒரு நிரந்­தர தீர்வை எட்­டு­வ­தற்­கான நல்ல வாய்ப்பு கிடைத்­துள்­ளது.

இரண்டு பிர­தான கட்­சி­க­ளி­னதும் தலை­வர்கள் தேசிய அர­சாங்கம் ஊடாக சிறு­பான்மை மக்­களின் உரி­மைகள் தொடர்­பான விட­யங்­களை அதி­க­ளவில் பக்­கு­வப்­பட்ட மற்றும் நெகிழ்­வுத்­தன்­மை­யு­டைய நோக்கில் ஆராய்­கின்ற தலை­மை­க­ளாக இருக்­கின்­றமை எங்­க­ளுக்­கி­ருக்­கின்ற மிகப்­பெ­ரிய வாய்ப்­பாகும். அதனை நாங்கள் தவ­ற­விட்­டு­வி­டக்­கூ­டாது.

கேள்வி: தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பு­ட­னான உறவு எவ்­வாறு உள்­ளது?

பதில்: தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பு­ட­னான எமது உறவு மிகவும் சிறப்­பாக உள்­ளது. நாங்கள் தொடர்ந்து கூட்­ட­மைப்­புடன் பேசிக்­கொண்டு வரு­கின்றோம். எமது இரண்டு தரப்­புக்­க­ளுக்­கி­டையில் அதி­க­ள­வான புரிந்­து­ணர்வு காணப்­ப­டு­கின்­றது. ஒரு சில விட­யங்­களில் இன்னும் இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அவற்றை நாங்கள் தாம­திக்­கா­மலும் அதே­நேரம் அவ­ச­ரப்­ப­டா­மலும் செய்­ய­வேண்­டி­யுள்­ளது.

காரணம் சில தரப்­புக்கள் வேண்­டு­மென்றே சில விட­யங்­களை போட்­டு­டைத்துக் கொண்­டி­ருக்­கின்­றன. இவற்­றை­யெல்லாம் நாங்கள் நல்ல புரிந்­து­ணர்­வோடு கையாள முடி­யு­மென்றும் நம்­பிக்கை இருக்­கின்­றது. அதே­வேளை தேர்தல் சீர்­தி­ருத்தம் தொடர்­பாக சிறிய கட்­சி­க­ளுடன் குறிப்­பாக மலை­யக மற்றும் சிறு­கட்­சி­க­ளுடன் மேலும் பல இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அது தொடர்­பாக இந்த பிர­தான வழிநடத்தல் குழுவில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இறுதியாக பக்குவமாகவும், சாணக்கியமாகவும், சமயோசிதமாகவும், செயற்பட்டால் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை காணமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் வடக்கிலும், தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே எமக்கு சவாலாக உள்ளன. அவர்கள் சித்துவிளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர். இதிலே நாங்கள் சிக்கிவிடாமல் நடுநிலைப் பேணி செயற்படவேண்டும்.

கடந்த கால அனுபவங்களுடன் பார்க்கையில் தற்போது உருவெடுத்துள்ள இனவாதம் எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளும் பொங்குதமிழை நடத்தியே அவர்களுக்கிருந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டனர். சில விடயங்களில் அவ்வப்போது விட்ட தவறுகள் எங்களுக்கு படிப்பினையாக உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்