துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு

🕔 September 8, 2016

dumintha-0111முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேம சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதி சிரான் குணரத்ன தலைமையில், நீதிபதிகள் பத்மினி ரணவக்க மற்றும் எம்.சி.பி.எஸ். மொராயஸ் உள்ளிட்ட குழுவினர் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு மேல் மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்ற தினத்தில், அங்கொட பிரதேசத்தில் வைத்து, பாரத லக்ஸ்மன் பிரேம சந்திர உள்ளிட்ட நால்வர், சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதியில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களாக, இந்த வழக்கு இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்