வேன் – பஸ் கோர விபத்து; நான்கு வயது குழந்தை உட்பட, ஐவர் பலி
🕔 September 2, 2016
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Kilakkin-Kedayam-750x150-01-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/02/EFC-750X150-02.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/12/Atham-Lebbe-01-7500X150-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/01/Abdullah-750X150-03-.jpg)
கலேவெல – தொலமகொல்ல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் பலியானதோடு, 07 பேர் காயமடைந்துள்ளனர்.
குருணாகல் – தம்புள்ள பிரதான வீதியின் கலேவெல, தொலமகொல்ல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.
வேன் ஒன்றும் – பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன்போது வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவ்விபத்தில் நான்கு வயது குழந்தையொன்றும் பலியாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேரின் நிலை, கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
![](https://puthithu.com/wp-content/uploads/2024/03/Alahapuri-750X150-01.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Fairoos-Express-750x150-01-.jpg)