பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.