அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால், 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, மத்திய மாகாண வைத்தியசாலைகள் சிலவற்றின் அபிவிருத்திக்கு பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீமினால் 25 மில்லியன் ரூபா உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சாந்திசமரசிங்க, அமைச்சர் ஹக்கீமுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அத்துடன், மத்திய மாகாண வைத்தியசாலைகளின் மேம்பாட்டில், அமைச்சர் செலுத்திவரும் கரிசனையையிட்டும் அவர் நன்றிதெரிவித்துள்ளார்.
அண்மையில், கண்டியில் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அலுவலகத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீம் மற்றும் மாவட்ட வைத்தியர்கள், உயரதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைவாக, இந்த நிதி ஒதுக்கீடு உரிய முறையில் பயன்படுத்தப்படுமெனவும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சாந்தி சமரசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.