முஸ்லிம் விரோத செயற்பாடு; அரசு மீது அவநம்பிக்கை ஏற்படலாம்: ஜனாதிபதிக்கு றிசாத் கடிதம்

🕔 July 2, 2016

Rishad - 075முஸ்­லிம்கள் மீது முன்­னெ­டுக்­கப்­படும் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக, உரிய நட­வ­டிக்கை எடுக்­காமல் விட்டால், நல்­லாட்சி அரசாங்­கத்தின் மீதான முஸ்­லிம்­களின் ஆத­ரவு இல்­லா­ம­லாகி விடும் என்று, அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் ஜனா­தி­ப­திக்கு தெரிவித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்­பி­யுள்ள அவ­சரக் கடி­தத்­தி­லேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது;

பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­பொட­ அத்தே ஞான­சார தேரர் தொடர்ந்து இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் நிந்­தித்து வரு­கிறார். அவர் வெளியிடும் கருத்­துகள் – நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் விரி­சலை ஏற்­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளன.

கடந்த ஆட்­சியில் அழுத்­கம மற்றும் பேரு­வளை பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதிராக இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுக்கு ஞான­சார தேரரே மூல காரணமென ஆதா­ரங்­க­ளுடன் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் இற்­றை­வரை அதற்கெ­தி­ராக எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. மேலும் அந்த வன்­மு­றைகள் தொடர்பில் ஆணைக்­குழு அமைத்து முழு­மை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென நாம் விடுத்த கோரிக்­கையும் இன்னும் நிறை­வேற்­றப்­ படவில்லை.

நல்­லாட்சி அர­சாங்­கத்தால் மத நிந்­த­னைக்கு எதி­ரான சட்ட மூல­மொன்று கொண்டு வரப்­ப­டு­மென ஏற்­க­னவே உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அந்த சட்ட மூலம் இது­வ­ரையில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. அவ்­வா­றான சட்ட ஏற்­பாடு ஏற்­ப­டுத்­தப்­ பட்டி­ருந்தால், மதங்­களை தூஷிக்கும் இன­வா­தி­களின் செயற்­பா­டு­களை கட்டுப்படுத்த இய­லு­மாக இருந்­தி­ருக்கும்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆட்­சி­பீ­ட­மேற்ற முஸ்­லிம்கள் சகல விதத்­திலும் பங்­க­ளிப்பு செய்­துள்­ளார்கள். எனினும், முஸ்லிம்கள் உயி­ரிலும் மேலாக மதிக்கும் புனித இஸ்லாத்­தையும், அல­்குர்­ஆ­னையும், முகம்மது நபியையும் கொச்­சைப்­ப­டுத்தும் இன­வா­தி­களின் செயற்­பா­டுகள் இந்த ஆட்­சி­யிலும் இடம்­பெ­று­வ­தை­யிட்டு முஸ்லிம்கள் மிகுந்த கவலை கொண்­டுள்­ளனர்.

எனவே, முஸ்­லிம்­க­ளுக்கு எதி ரான இனவாத செயற்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்படுவார்கள் எனவும் அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்