பொரளை கிறிஸ்தவ தேவாலய விவகாரம்: வைத்தியருக்கு கைக்குண்டு வழங்கியவர் கைது 0
பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியருக்கு குறித்த குண்டை வழங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்ட – ரன்ன பகுதியில் வைத்து, குறித்த சந்தேக நபர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில், பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள ‘ஓல் செயின்ட்ஸ்’